24 66292a11432a5
இலங்கைசெய்திகள்

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் ஆபத்து

Share

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் ஆபத்து

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகளின் செயற்பாடுகளை உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

விரைவு ரயில் பயணங்களின் போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிதிபலகையில் பயணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் உயிராபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக மலையகத்திற்கான ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளே இவ்வாறு செயற்படுகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் தங்களின் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் ஃபுட் போர்டில் ஏறி செல்ஃபி எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், அண்மைக்காலமாக பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டடுகின்றனர்.

அண்மையில் ஒஹியா ரயில் நிலையத்திற்கு அருகில் பொடி மினிகே எக்ஸ்பிரஸில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் கீழே விழுந்தார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற சம்பவத்தில் ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த காயமடைந்தார்.

இந்த ஆபத்தான பயணத்தை தடுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...