24 662742da992e6 scaled
இலங்கைசெய்திகள்

கோடிகளை கொட்டி யாழில் தந்தைக்காக மகன் கட்டிய தாஜ்மகால்

Share

கோடிகளை கொட்டி யாழில் தந்தைக்காக மகன் கட்டிய தாஜ்மகால்

யாழில் (Jaffna) இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் மிகவும் பிரமாண்டமான ரீதியில் ஒரு நினைவாலயத்தை அமைந்துள்ளார்.

கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு கந்தக்கோட்டம் என பெயர் சூட்டியுள்ளார்.

இந்த நினைவாலயமானது, யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

கடந்த 2011.04.01 அன்று தந்தை உயிரிழந்த நிலையில் அடுத்த வாரமே இந்த நினைவாலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு வருடத்தில் பெரும்பாலான வேலைகள் செய்து முடித்து இருந்தாலும், நிதிப் பிரச்சினை காரணமாக அதனை முற்றுப்பெற வைக்க முடியாத நிலையில் மிகுதி வேலைகள் தற்போது இடம்பெறுகின்றன.

அத்துடன், கடந்த பல வருடங்களாக, இந்த நினைவாலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்களுக்கு 40% இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது.

இந்த கட்டடக்கலையானது இந்திய கலைஞர்களால் கட்டப்பட்டது போன்று தோற்றமளித்தாலும் முற்றுமுழுதாக யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் கை வண்ணத்திலேயே கட்டப்பட்டுள்ளது.

தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் ஆலயங்களின் கட்டடக் கலைகளை உள்ளடக்கியே இந்த நினைவாலயம் அமைக்கப்பெற்றுள்ளது.

அண்மைக் காலங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே வன்முறைகள், முரண்பாடுகள் தோற்றம்பெற்று வரும் நிலையில், தந்தைக்காக மகன் கட்டிய இந்த நினைவாலயமானது அடுத்தகட்ட சந்ததியை நல்வழிப்படுத்துவதற்கான முன்னுதாரணமாக உள்ளது.

Share
தொடர்புடையது
buzz
உலகம்செய்திகள்

நாங்கள் ஆறு முறை நிலவுக்குச் சென்றுள்ளோம்: 1969 நிலவுப் பயணம் உண்மையே என நாசா விளக்கம்!

1969 ஆம் ஆண்டு மனிதன் நிலவில் காலடி வைத்த நிகழ்வு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும்...

25 690489b584776
செய்திகள்இலங்கை

தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது விலையுயர்ந்த நாடு

Numbeo வலைத்தளத்தின் தரவுகளின்படி, இலங்கை, தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பில் (SAARC) இரண்டாவது மிகச் செலவுமிக்க...

25 68eee1ad403f8
இலங்கைசெய்திகள்

குருந்தூர்மலையில் நில அபகரிப்பு: தொல்லியல் திணைக்கள அதிகாரி மீது பௌத்த துறவியே குற்றச்சாட்டு – சாணக்கியன் கடிதத்தை வெளியிட்டார்

குருந்தூர்மலைப் பிரதேசத்தில் திட்டமிட்டுக் காணிகள் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, தொல்பொருள் திணைக்களத்தின் பிரதி அத்தியட்சகராகச்...

Jaffna Uni 1200x675px 28 10 25 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேல் மர்மம்: இரண்டு துப்பாக்கி மகசின்கள் மற்றும் வயர்கள் மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இரண்டு துப்பாக்கி மகசின்களும் (Magazines) மற்றும் வயர்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்...