23 63b5a0094fb7d
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

Share

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

பிரமிட் திட்டங்களில் ஈடுபடும் மேலும் எட்டு நிதி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு நேற்றைய தினம் (22.04.2024) வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கிக்கு கிடைத்த முறைப்பாடுகளின்படி, 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 83(c) பிரிவை மீறி தடை செய்யப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கைகளின்படி, எட்டு வங்கிச் சட்டத்தின் பிரிவு 83(c)ஐ மீறி நிறுவனங்கள் செயல்பட்டதாக மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

மேலும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி பொது மக்களுக்கு விடுத்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...