24 6618a49c4fc9a
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலுள்ள நபரினால் இலக்கு வைக்கப்படும் கொழும்பு கோடீஸ்வரர்

Share

வெளிநாட்டிலுள்ள நபரினால் இலக்கு வைக்கப்படும் கொழும்பு கோடீஸ்வரர்

கொழும்பின் புறநகர் பகுதியான கடுவெல பகுதியில் இன்று அதிகாலை உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் கடுவெல அதுருகிரி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் அது வெடிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீட்டின் முன் சில மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஓடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த செயலை செய்த வெளிநாட்டில் இருக்கும் கைவரு முத்துவா என்பவரின் வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொரத்தோட்ட கைவரு முத்துவா என்பவருக்கு பல வர்த்தகர்கள் கப்பம் கட்ட மறுத்ததால், ஆட்களை பயன்படுத்தி இவ்வாறு அச்சுறுத்தி வருவதாக நவகமுவ பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...