Army personnel killed in ceasefire violation by Pakistan in SECVPF
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Share

பாகிஸ்தான் – கைபர் பக்துன்வா மாகாணத்தில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானிய பாதுகாப்புப்படை வீரர்களாலேயே குறித்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் நான்கு தளபதிகளும் உள்ளடங்குகின்றனர்.

இச் சம்பவத்தின் போது ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் வெடிபொருட்கள் தயாரிப்பு, துப்பாக்கிச்சூடு நடாத்துதல், சாதாரண மக்களை குறிவைத்து கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களாவார்

மேலும் அவர்கள், வர்ஜிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...