24 661182f78a2be
உலகம்செய்திகள்

சீனாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய மைக்ரோசொப்ட்

Share

சீனாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய மைக்ரோசொப்ட்

உலகம் முழுவதும் இந்தியா உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கபடுகின்ற நிலையில் சீனா தேர்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு, பிரதானமாக இந்தியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் நடைபெற உள்ள தேர்தல்களில் இடையூறு ஏற்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், மைக்ரோசொப்டின் அச்சுறுத்தலை கண்டறிவதற்கான நுண்ணறிவு குழு கூறும் தகவலின்படி, சீனாவின் சைபர் குழுக்கள், வடகொரியா தொடர்புடன், 2024ஆம் ஆண்டு நடைபெறும் பல்வேறு தேர்தல்களை இலக்காக கொண்டு செயற்படக் கூடும் என தெரியவந்துள்ளது.

அதன்போது, சீனாவானது, தங்களுக்கு சாதகம் ஏற்படும் வகையில், பொது மக்களின் கருத்துகளை மெல்ல சமூக ஊடகம் வழியே பரப்பி விடுவதற்காக, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட செய்திகளை அள்ளி குவிக்குமென்று மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது.

அத்துடன், சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நாடுகள் உலக மக்கள் தொகையில் கூட்டாக 49 சதவீதம் அளவுக்கு பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 69024640d7629
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் கோரம்: காஸாவில் 46 சிறுவர்கள் உட்பட 104 உயிர்கள் பலி. 

போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட...

25 69020579437a3
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் மீதான வன்முறை குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிவந்தது

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

25 6901f9eea7d4a
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் பலாலி காணி விடுவிப்பு குறித்து கொழும்பில் உயர் மட்டப் பேச்சுவார்த்தை.

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் மீதமுள்ள தனியார் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்துவதற்காக இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறுவதை...

25 69020d87ab94b
இலங்கைசெய்திகள்

பாடசாலை நேரம் நீடிப்பு: போக்குவரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 05 முதல் தரம் 13 வரையிலான அனைத்து வகுப்புகளின்...