24 6611a49371d49
உலகம்செய்திகள்

முறுகல் நிலையிலும் மாலைதீவுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

Share

முறுகல் நிலையிலும் மாலைதீவுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

இந்தியா, மாலைதீவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு அந்நாட்டு அமைச்சர் ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார்.

மாலைதீவுக்கு அதிபராக முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

மாலைதீவு அதிபர் முய்சு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என்பதால் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து அவர் மேற்கொண்டு வந்தார்.

அத்தோடு, மாலைதீவு அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் மோடி விமர்சித்து பேசியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இந்நிலையில், மோதல் போக்கு நிலவி வந்தாலும் மாலைதீவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.

அதன்போது, சர்க்கரை, கோதுமை, அரிசி , வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாலைதீவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக சரியான நேரத்தில் மாலைதீவுக்கு இந்தியா இந்த உதவியை செய்தமையால் தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...