24 6611a49371d49
உலகம்செய்திகள்

முறுகல் நிலையிலும் மாலைதீவுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

Share

முறுகல் நிலையிலும் மாலைதீவுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

இந்தியா, மாலைதீவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு அந்நாட்டு அமைச்சர் ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார்.

மாலைதீவுக்கு அதிபராக முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

மாலைதீவு அதிபர் முய்சு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என்பதால் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து அவர் மேற்கொண்டு வந்தார்.

அத்தோடு, மாலைதீவு அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் மோடி விமர்சித்து பேசியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இந்நிலையில், மோதல் போக்கு நிலவி வந்தாலும் மாலைதீவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.

அதன்போது, சர்க்கரை, கோதுமை, அரிசி , வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாலைதீவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக சரியான நேரத்தில் மாலைதீவுக்கு இந்தியா இந்த உதவியை செய்தமையால் தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...