21 614d5e306f01d666
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பில் தீர்மானமில்லை

Share

அத்தியாவசிய பொருட்களான பால்மா , எரிவாயு, கோதுமை மா மற்றும் போன்றவற்றின் விலைகள் அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளுக்கான உத்தேச திருத்தங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இது தொடர்பில் எந்தத் தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தில் தடைப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை வெளியிடுவதற்கு மத்திய வங்கியிலிருந்து தேவையான நிதி வழங்க அமைச்சரவை முடிவு செய்தள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரிசிக்கு விதிக்கப்பட்ட விலைக்கட்டப்பாட்டை நீக்கி அரிசி பற்றாக்குறையை தடுக்க ஒருலட்சம் மெற்றித் தொன் அரிசியை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை நேற்றைய தினம் முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....