24 66063236ec41f
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் மக்களை ஏமாற்றி பல மில்லியன் ரூபா மோசடி

Share

இலங்கை முழுவதும் மக்களை ஏமாற்றி பல மில்லியன் ரூபா மோசடி

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உணவுப்பொருட்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதாக நடித்து ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடியான முறையில் 50 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை பெற்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரஸ்ஸன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய நபர் ஒருவர் தலத்துஓயா பொலிஸ் பிரிவில் பதுங்கியிருப்பதாக கடுகன்னாவ பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் கண்டி, வலப்பனை மற்றும் கடுகன்னாவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் பணத்தை மோசடி செய்துள்ளார்.

கொழும்பில் இருந்து பொருட்களை லொறிகளுக்கு ஏற்றும் வழியில், குறித்த நபர் பொருட்களை திருடுவதாகவும் மேலும் இந்த பொருட்களில் உரங்கள், சீனி, மா, பருப்பு மற்றும் அரிசி ஆகியவை அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

கடுகன்னாவ பொலிஸாரால் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான நீதவான் ஸ்ரீநாத் விஜேசேகர உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...