paniU scaled
இலங்கைசெய்திகள்

யாழ். – கிளிநொச்சி மக்களுக்கு புதிய குடிதண்ணீர் திட்டங்கள்

Share

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் 24 ஆயிரம் மீற்றர் கணம் கொள்ளளவு கொண்ட சுத்தமான குடிதண்ணீர் வழங்கும் இரண்டு முக்கிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இத் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஒக்ரோபர் 6ஆம் யாழ்ப்பாணம் வருகை தந்து ஆரம்பித்து வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் 60 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒரு திட்டமாக 5 ஆயிரம் குடும்ப பயனாளிகளுக்கு உப்பு நீரை சுத்திகரித்து குடிதண்ணீராக மாற்றும் (SWRO) தொகுதி மூலம் குடிதண்ணீர் வழங்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக யாழ்.நகரை மையமாகக் கொண்டு ஒரு லட்சம் மக்களுக்கு பயன்தரும் 284 கிலோமீற்றர் தூரம் கொண்ட மற்றொரு குடிதண்ணீர் திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு சுமார் 3 லட்சம் மக்கள் சுத்தமான குடிதண்ணீரை பெற ஏதுவாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...