paniU scaled
இலங்கைசெய்திகள்

யாழ். – கிளிநொச்சி மக்களுக்கு புதிய குடிதண்ணீர் திட்டங்கள்

Share

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் 24 ஆயிரம் மீற்றர் கணம் கொள்ளளவு கொண்ட சுத்தமான குடிதண்ணீர் வழங்கும் இரண்டு முக்கிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இத் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஒக்ரோபர் 6ஆம் யாழ்ப்பாணம் வருகை தந்து ஆரம்பித்து வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் 60 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒரு திட்டமாக 5 ஆயிரம் குடும்ப பயனாளிகளுக்கு உப்பு நீரை சுத்திகரித்து குடிதண்ணீராக மாற்றும் (SWRO) தொகுதி மூலம் குடிதண்ணீர் வழங்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக யாழ்.நகரை மையமாகக் கொண்டு ஒரு லட்சம் மக்களுக்கு பயன்தரும் 284 கிலோமீற்றர் தூரம் கொண்ட மற்றொரு குடிதண்ணீர் திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு சுமார் 3 லட்சம் மக்கள் சுத்தமான குடிதண்ணீரை பெற ஏதுவாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...