24 660275f96ad98
இலங்கைசெய்திகள்

அதிருப்தி அடைந்துள்ள இலங்கை அதிகாரிகள்

Share

அதிருப்தி அடைந்துள்ள இலங்கை அதிகாரிகள்

இந்திய அதானி குழுமத்தின் மன்னார் காற்றாலைத் திட்டத்தை விரைவுபடுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

உட்கட்டமைப்புத் திட்டங்களில் இந்தியாவின் அதீத ஈடுபாட்டால் இலங்கை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும்.

சில அதிகாரிகள் குறித்த திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை விரைவாகக் கண்காணிக்க உதவுவதில்லை” என அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தால் நாட்டிற்கு நேரடியான பலன் இருந்தாலும் அவர்கள் இந்தியாவை நம்பவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் 26 ஆண்டுகால ஆயுத மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் மத்தியில் இந்திய எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டமையும் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.

“வடக்கு-கிழக்கு பிரதேசம், முதலீட்டின் பற்றாக்குறையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம், இலங்கையில் அதன் சமீபத்திய பல பரிமாண பாதிப்பு சுட்டியை வெளியிட்டது.

அதில் வடக்கு-கிழக்கில் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்களில் பெரும் சதவீதத்தினர் பல பாதிப்புகளை கொண்டிருப்பதாகக் காட்டியுள்ளது. ஒட்டு மொத்தமாக, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பரிமாண பாதிப்புகள் அதிகமாக உள்ளன.

இருந்த போதிலும், இலங்கையின் உயிரியல் பன்முகத்தன்மை விஞ்ஞானியான ரொஹான் பெத்தியகொட, அதானியின் இந்த திட்டத்தை “மற்றொரு வீணான மோசடி” என்று கூறியுள்ளார்.

அத்துடன் அதன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு தாக்கம் மற்றும் விலை நிர்ணயம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
rent 1200px 05 09 23
செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும்...

26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...