tamilni 443 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் வாகனத்தை தாடியால் இழுத்து உலக சாதனை படைத்த முதியவர்

Share

கொழும்பில் வாகனத்தை தாடியால் இழுத்து உலக சாதனை படைத்த முதியவர்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

யாழ்ப்பாணம், தென்மராட்சியை சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் என்ற முதியவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

குறித்த சாதனை நிகழ்வானது நேற்று (24) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் கொழும்பு – காலிமுகத்திடலில் இடம்பெற்றுள்ளது.

1000 மீற்றர் தூரத்துக்கு வாகனத்தை தனது தாடியாலும், தலைமுடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

இதற்கமைய 1550 கிலோ கிராம் எடையுடைய பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரத்துக்கு தாடியாலும், 500 மீற்றர் தூரம் வரை தலைமுடியாலும் இழுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை நிகழ்வை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உலக சாதனை புத்தக நிறுவனப் பிரதிநிதிகள் ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வை சோழன் உலக சாதனை புத்தக (Cholan Book of World Record) நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக அவதானித்து திருச்செல்வத்தின் சாதனையை அங்கீகரித்துள்ளதுடன் விருதையும், பட்டயத்தையும் அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...