24 65ffa5871c5ac
இலங்கைசெய்திகள்

மார்ச் மாத இறுதிக்குள் இஸ்ரேலில் தரையிறங்கும் தொழிலாளர்கள்

Share

மார்ச் மாத இறுதிக்குள் இஸ்ரேலில் தரையிறங்கும் தொழிலாளர்கள்

இலங்கையில் இருந்து குறைந்தது 1,000 தொழிலாளர்கள் மார்ச் மாத இறுதிக்குள் இஸ்ரேலில் தொழில் நிமித்தம் தரையிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேலின் சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிய வருகையில், “குறிப்பாக, தோடம்பழச்செய்கை துறையிலேயே அவர்கள் பணிகளுக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

அதே நேரம், கடந்த வாரம் 122 இலங்கைத் தொழிலாளர்கள் தமது நாட்டில் தரையிறங்கியுள்ளனர்.

இந்த வாரம் 377 பேரும் அடுத்த வாரம் மேலும் 258 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு வரவுள்ளனர்.

அக்டோபர் 7 ஹமாஸ் படுகொலைக்குப் பிறகு, விவசாயத் துறையில் பின்னடைவுகள் ஏற்பட்டன. எனினும் அந்த இடைவெளிகளைக் குறைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் ஒரு படியாகவே வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இஸ்ரேல் அரசின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதில் இலங்கையிடம் இருந்து உடனடி பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...