24 65fce3c81e17c
இலங்கைசெய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்

Share

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்

பிங்கிரிய பிரதேசத்தில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக கணவன் இந்த செயலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 33 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளதாகவும் அவர் தியகெலியாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை சம்பவம் தொடரல்பில் 40 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு நீண்டத் தூரம் சென்ற நிலையில் கணவர் இவ்வாறு கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 207
செய்திகள்இலங்கை

புத்தாண்டு விடுமுறை சோகம்: 4 நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் வகையில் நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில், கடந்த ஏப்ரல் 12...

world 206
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மல்லாவியில் இரு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்: மத போதகர் உள்ளிட்ட மூவர் அதிரடி கைது!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – வவுனிக்குளம் பகுதியில் இரு யுவதிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில்...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 204
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் 21 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat...