tamilni 338 scaled
உலகம்செய்திகள்

ஒவ்வொரு நாளும் ராஜினாமா செய்யும் எண்ணம் வருகிறது: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம்

Share

ஒவ்வொரு நாளும் ராஜினாமா செய்யும் எண்ணம் வருகிறது: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தனது பணி கடினமானது என தெரிவித்துள்ளார்.

இதனால் தினமும் ராஜினாமா செய்வது பற்றி யோசிப்பதாகவும் அவர் கூறினார்.

ரேடியோ-கனடாவுக்கு அளித்த பேட்டியில் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது- அரசியலில் இருந்து விலகுவது பற்றி தினமும் யோசிக்கிறேன். ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணம் தினமும் வருகிறது.

நான் செய்வது கிறுக்குப்பிடிக்கவைக்கும் வேலை (crazy job). தனிப்பட்ட தியாகம் செய்ய வேண்டும். நிச்சயமாக, இது மிகவும் கடினம், சில நேரங்களில் அது நன்றாக இல்லை.” என்று கூறியுள்ளார்

ட்ரூடோ தனது மனைவி சோஃபியை (Sophie Grégoire Trudeau) ஆகஸ்ட் 2023-இல் பிரிந்தார்.

திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.

கனடாவின் 23வது பிரதமராக ஜஸ்டின் பியர் ஜேம்ஸ் ட்ரூடோ நவம்பர் 2015ல் பதவியேற்றார். ஏப்ரல் 2013 முதல் லிபரல் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

கனடாவில் 2025 அக்டோபரில் பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்கு முன்னதாக அங்கு பிரதமருக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வுகளில் ட்ரூடோ மிகவும் பின்தங்கியுள்ளார். அவரது புகழ் குறைந்து வருவதாக தெரிகிறது. அவரது லிபரல் கட்சியும் கன்சர்வேட்டிவ் கட்சியை விட பின்தங்கியுள்ளது என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடும் போதே அவர் அரசியலில் இருந்து விலகுவது குறித்து குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அடுத்த தேர்தல் வரை பதவி விலகப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...