tamilnaadi 122 scaled
இலங்கைசெய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீடு வழக்கை தள்ளுபடி செய்யும் கோரிக்கை நிராகரிப்பு

Share

எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீடு வழக்கை தள்ளுபடி செய்யும் கோரிக்கை நிராகரிப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீடு வழக்கை தள்ளுபடி செய்யும் கோரிக்கை நிராகரிப்புஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோரி அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்புறுதிப் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க லண்டன் நீதிமன்றம் வரையறைகளை விதித்துள்ளதால், வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கப்பலின் காப்புறுதி நிறுவனத்தின் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் ஆட்சேபனை தெரிவிக்க காப்புறுதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

இதற்கு சிங்கப்பூர் வர்த்தக மேல் நீதிமன்றம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை காப்புறுதி நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...