tamilnib 8 scaled
இலங்கைசெய்திகள்

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் எச்சரிக்கை

Share

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் எச்சரிக்கை

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை உள்நாட்டு முட்டைகள் எனக்கூறி விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளில் இடப்பட்டுள்ள முத்திரையை அழித்து, உள்நாட்டு முட்டைகள் என விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக அண்மையில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சதொச நிறுவனங்கள் ஊடாக ஒரு முட்டை 43 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த முட்டைகளின் உற்பத்தி திகதி உள்ளிட்ட விபரங்கள் முத்திரையிடப்பட்டுள்ளன.

இந்த முத்திரையை அழித்து விட்டு உள்நாட்டு சந்தையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக உள்நாட்டு முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முத்திரைகள் விசேட உபகரணமொன்றின் மூலம் அழிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

சதொச நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை கொள்வனவு செய்து அவற்றில் காணப்படும் முத்திரைகளை அழித்து விட்டு ஒரு முட்டை 50 ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...