prai bus scaled
இலங்கைசெய்திகள்

17000 ஆயிரம் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்

Share

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் கொரோனாப் பரவல் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதன்படி முதற்கட்டமாக அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ள 17 ஆயிரம் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, கண்டி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த நிவாரண வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் விரைவில் நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம்  நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் நிலையில் அதன் பின் சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய போக்குவரத்தை மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சாரதிகள், நடத்துநர்கள் இருவரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.

பயணிகளும் தடுப்பூசிகளை ஏற்றியிருத்தல் வேண்டும்.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்லுதல் வேண்டும் போன்ற விடயங்கள் உள்ளடங்கிய புதிய போக்குவரத்துத் திட்டம வகுக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் கொவிட் செயலணி கூடும் முன் குறித்த திட்டத்தை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
rent 1200px 05 09 23
செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும்...

26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...