file 20201007 22 lql17v 1 scaled
செய்திகள்இலங்கை

குணமடைந்த பின்னரும் சிறுவர்களுக்கு ஏற்படும் புதிய அறிகுறிகள்!

Share

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பின்னர், பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

25 சிறுவர்கள் இவ்வாறான நோய்களுக்கு உள்ளாகி கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவர்கள் அனைவரும் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பின்னர், மீண்டும் உடல் உறுப்புக்களில் தொற்று ஏற்பட்டதால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களாவார்.

குறிப்பாக மூளை, இதயம் மற்றும் சிறுநீரகத்தில் பல்வேறு பிரச்சினைகள், இதயத் துடிப்பு அதிகரித்தல், நிமோனியா, காய்ச்சல் தொடர்ந்து நீடித்தல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இவர்களிடம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தொற்றிலிருந்து குணமடைந்து 6 மாதங்கள் வரை இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...

body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...