tamilni 232 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் பதற்றம் : பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Share

தென்னிலங்கையில் பதற்றம் : பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேநகபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

ஜனவரி 23 ஆம் திகதி, கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹட்டன கனராம விகாரையில் பணிபுரிந்த கலப்பலுவ தம்மரதன தேரரை காரில் வந்த குழுவினர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 32 வயதான நபர் நேற்று (11) பிற்பகல் ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையின் அடிப்படையில் அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபர் நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...