tamilni 230 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் மாணவர்களைத் தவிர்க்கும் அரச பேருந்துகளின் அசமந்தபோக்கு

Share

வடக்கில் மாணவர்களைத் தவிர்க்கும் அரச பேருந்துகளின் அசமந்தபோக்கு

வட பகுதியில் இயங்கும் அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது பயணிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இந்த பிரச்சனை நீண்டகாலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இயங்கும் அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரச்சினையானது எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

எனவே இவ்விடம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...