tamilnaadij 2 scaled
உலகம்செய்திகள்

திரவம் நிரப்பிய போத்தல்களில் பிஞ்சு பிள்ளைகளின் சடலம்

Share

திரவம் நிரப்பிய போத்தல்களில் பிஞ்சு பிள்ளைகளின் சடலம்

திரவம் நிரப்பிய கண்ணாடி போத்தல்களுக்குள் இரண்டு குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர் என்று கருதப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொங்ஹொங்கின் Tuen Mun பகுதியில் காலியாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு ஆண் குழந்தைகளின் சடலத்தை தனித்தனி கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையில் துப்புரவு பணியாளர் ஒருவர் கண்டெடுத்தார்.

தகவல் அளிந்த பொலிசார் முன்னெடுத்த நடவடிக்கையில் 24 வயது ஆணும் 22 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில்,

வெள்ளிக்கிழமை பகல் 10 மணியளவில் குடியிருப்பு உரிமையாளரால் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளியால் அந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இரு கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. ஆனால் நிரப்பட்ட திரவம் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும், இரண்டு குழந்தைகளின் இறப்புக்கான காரணம் தடயவியல் நோயியல் நிபுணரால் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...