3 1 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவிலிருந்து இலங்கை திரும்பியவுடன் பசில் அறிவிப்பு

Share

அமெரிக்காவிலிருந்து இலங்கை திரும்பியவுடன் பசில் அறிவிப்பு

மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் தமக்கு இல்லை என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக அமெரிக்காவில் தங்கியிருந்த பசில் ராஜபக்ச இன்று (05.03.2024) காலை 8.16 மணியளவில் Emirates Airline விமானமான EK 650 இல் இலங்கை வந்தடைந்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோர் விமான நிலையத்திற்குச் சென்று பசில் ராஜபக்சவை வரவேற்றனர்.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பசில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை. அத்துடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை.

எனினும் எந்த தேர்தல் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன். தேவையான இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என நம்புகிறேன். ஒவ்வொரு தேர்தலும் சவாலாகவே உள்ளது.

நாங்கள் மக்களை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. மக்கள் சொல்வதைச் செய்கிறோம் என குறிப்பினட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...