tamilni 27 scaled
இலங்கைசெய்திகள்

அதிக சம்பளம் பெறும் வேலைகள் இலங்கையில்

Share

அதிக சம்பளம் பெறும் வேலைகள் இலங்கையில்

அடுத்த 10 ஆண்டுகளில், உள்நாட்டு சேவை வேலைகள் அதிக திறன் கொண்ட, அதிக ஊதியம் பெறும் வேலைகளாக மாற்றப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பெண்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதைத் தடுக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பாலின அடிப்படையில் யாருடையதும் நடமாட்டம், வேலைவாய்ப்பு என்பவற்றைக் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால் ஒரு நாடாக, வெளிநாட்டு உள்நாட்டு சேவை வேலைகளுக்குச் செல்வதற்குப் பதிலாக, உயர்தர வீட்டுப் பணியாளர்கள் அல்லது உயர்நிலை வேலைகள் போன்ற திறமையான வேலைகளுக்கு மட்டுமே அனுப்ப முடிவு செய்கிறோம்.

எனவே, பெண்கள் எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலைக்குச் செல்லலாம். ஆனால் அது வீட்டுப் பணிப்பெண் வேலையாக இருக்காது.

இதனைக் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலைமையை நிறுத்த 5_-10 ஆண்டுகள் காலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போதும் 28 நாள் கட்டாய பயிற்சிக்குப் பிறகே பெண்களை வீட்டுவேலைக்கு அனுப்புகிறோம். ஆனால் பயிற்சிக்கு அனுப்பினாலும் வீட்டு வேலை செய்யத்தான் அனுப்பப்படுகின்றனர்.

இதனைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தத் தயாராக உள்ளோம். அதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஏற்கனவே 28 நாட்கள் கட்டாய பயிற்சி உள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில், உள்நாட்டு சேவை வேலைகள் அதிக திறன் கொண்ட, அதிக ஊதியம் பெறும் வேலைகளாக மாற்றப்படும். அதன்படி, உரிய சம்பள சீர்திருத்தம் செய்யப்படும். குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பு உத்தரவாதம் என்பன தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...