tamilni 426 scaled
உலகம்செய்திகள்

மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்! பத்திரிகையாளர் உட்பட 6 பேர் மரணம்

Share

மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்! பத்திரிகையாளர் உட்பட 6 பேர் மரணம்

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்லில் பாலஸ்தீன ஊடகவியலாளர் உட்பட 6 பேர் பலியாகினர்.

ஹமாஸ், இஸ்ரேல் இடையே தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் காசாவின் வெவ்வேறு பகுதிகளில் ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காசாவின் சுகாதார அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.

பலியான 6 பேரில் ஊடகவியலாளர் அப்துல்லா டார்விஷும் (Abdullah Darwish) ஒருவர். இவர் அல் அக்ஸா (Al-Aqsa) என்ற செயற்கைக்கோள் தொலைக்காட்சியின் புகைப்படக் கலைஞர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார்.

போர் தொடங்கிய கடந்த 7 வாரங்களில் பாலஸ்தீனியரான அப்துல்லா டார்விஷுடன் சேர்த்து மொத்தம் 71 ஊடகவியலாளர்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...