25 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Share

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க செயல்பட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார்.

இந்த ஆண்டு இலங்கையில் அனைத்து தேர்தல்களும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் நடைபெறவிருந்த பல தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதற்கமைய, இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் உள்ளிட்ட ஏனைய தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பமென டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பு ஒருபோதும் மீறப்படக்கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பை மீறும் வகையில் சிறிலங்காவின் அதிபர் உள்ளிட்ட யார் செயல்பட்டாலும், குறித்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
anura kumara dissanayake
இலங்கை

தூர நோக்குடன் வரவு செலவு திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

  அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத்...

yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...