tamilnih 21 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலை அதிபராக நியமித்தது எப்படி..!

Share

தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்திற்கு அரசியலமைப்பில் வழங்கப்படவில்லை எனவும், அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை ஒத்திவைப்பது தவறு எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று (22) தெரிவித்தார்.

களனி விகாரைக்கு வருகை தந்த நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பு ரீதியாக அதிபர் தேர்தல் எதிர்காலத்தில் நடைபெறவுள்ளதால், தேர்தலுக்குத் தயாராக வேண்டியது எந்தவொரு அரசியல் கட்சியினதும் பொறுப்பாகும் என்றும், அதிபர் தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊடகங்கள் ஊடாக யார் என்ன ஆலோசனை கூறினாலும், அனைவரும் அரசியலமைப்பை நம்ப வேண்டும் எனவும், கடந்த காலங்களில் போராடி ரணில் விக்ரமசிங்கவை அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் தற்போதைய அதிபராக நியமித்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....