tamilni 497 scaled
உலகம்செய்திகள்

இந்திய கடற்படைக்கு வந்து குவியப்போகும் ஏவுகணைகள்

Share

இந்திய கடற்படைக்கு ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் செல்லும் பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் வாங்கப்படவுள்ளன.

சுமார் ரூ.19 ஆயிரம் கோடி செலவில் 200-க்கும் மேற்பட்ட பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை வாங்குவதற்கு அமைச்சர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்தியா-ரஷ்ய கூட்டு முயற்சியான பிரமோஸ் ஏரோ ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரை தளங்களில் இருந்து ஏவக்கூடிய சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது.

பிரமோஸ் என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணைகள் ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் பறக்கும்.

இத்தகைய வலிமை மிக்க 200 பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய கடற்படைக்கு வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏவுகணைகளை வாங்குவதற்கான முறையான ஒப்பந்தம் அடுத்த சில மாதங்களில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர்கள் கூறினர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...