21 613ecfe6ac7bf
இலங்கைசெய்திகள்

கடும் கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க முடிவு

Share

எதிர்வரும் முதலாம் திகதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, நாட்டை திறப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ள நிலையில், வாராந்தம் இடம்பெறும் கொவிட் 19 செயலணிக் கூட்டம் நேற்று நடைபெறவில்லை.

கொவிட் –19 ஜனாதிபதி செயலணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கூட ஆராய்ந்து முடிவு எடுக்கும். எனினும் இந்த வாரம் கூட்டம் இடம்பெறவில்லை.

இந்நிலையில், நாட்டை திறப்பது தொடர்பிலும் அதன் கட்டுப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொறுப்பானவர்களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாடு தொடர்ச்சியான மூடப்பட்டிருந்ததன் ஊடாக நல்ல பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராகம வைத்தியபீடத்தில் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி

  • அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 25 சதவீதத்தில் பணியாளர்களை அழைப்பது மட்டுப்படுத்தவேண்டும்.

  • பொதுப் போக்குவரத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது 50 சதவீதமாக இருக்க வேண்டும்

  • திருமண வைபவங்கள் உள்ளிட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடும் நிகழ்வுகளை முழுமையான தடை செய்தல் வேண்டும்.

  • கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் 70–80 சதவீதங்களுக்கு அண்மித்திருக்க வேண்டும்.

  • போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண வீதம் திருப்தியடையும் வகையில் குறைவடைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...