tamilni 381 scaled
இலங்கைசெய்திகள்

வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு

Share

வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு

இலங்கையின் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் நிபுணத்துவ மருத்துவர் சமால் சஞ்சீவ இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் சத்திர சிகிச்சை உபகரண பட்டியலின் முன்னுரிமை அடிப்படையில் சுமார் 3800 உபகரணங்கள் தட்டுப்பாடாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மொத்தமாக 5800 உபகரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமைக்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் தீர்வு காணப்படாவிட்டால் வைத்தியசாலை கட்டமைப்பில் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதயத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்ட்ரென்த் வகைகள், கண்களுக்கு பயன்படுத்தப்படும் லென்ஸ் வகைகள், கண் சத்திர சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், அவசர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இவ்வாறு தட்டுப்பாடாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கூடுதல் விலைக்கு மருந்து பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து விலகி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அவருடன் தொடர்பு பேணிய அதிகாரிகள் அந்தந்த பதவிகளில் நீடித்து வருவதனால் மோசடிகள் முழுமையாக இல்லாது ஒழிக்கப்படவில்லை என டொக்டர் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை நீக்குவதற்கு தற்போதைய சுகாதார அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...