1605415571 namal 2
செய்திகள்இலங்கை

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் விரைவாக விடுதலை! -நாமல் உறுதி

Share

தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ச விரைவான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் என அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார் .

அத்துடன், அரசாங்கங்கத்துக்கு இளைஞர்களை கைதுசெய்து தடுத்துவைக்க வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதிக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஊடகங்களிடம் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,.

தேவையற்ற விதமாக இளைஞர்களை கைதுசெய்து தடுத்துவைக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை, தெரியாது செய்த குற்றங்களுக்காக கைதாகி தடுப்பிலுள்ள இளைஞர்களை விரைவாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இளைஞர்கள் நாட்டின் பெறுமதியான சொத்துக்கள். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால் அதிக விடயங்கள் செய்யமுடியவில்லை.

இந்நிலையில், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல விடயங்களை பின்பற்ற வேண்டும் இதுவரையில் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவிட்டமைக்காக கைதாகியவர்களை நீதித்துறையுடன் பேசி விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும், கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டவிரோதமான நடவடிக்கைகள் தொடர்பாக தெரியவந்தால் பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள். சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முன்வரவேண்டும் – என அமைச்சர் நாமல் ராஜபக்‌ச அழைப்பு விடுத்துள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...