mahinda 1
இலங்கைசெய்திகள்

மஹிந்தவுடனான சந்திப்பு திருப்தி இல்லை! – பங்காளிக் கட்சியினர் கவலை

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பு திருப்தியளிக்கவில்லை என அரசாங்கத்தின் பங்காளி கட்சியினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஹெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற்று மாலை பங்காளிக் கட்சியினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்ற நிலையில், சந்திப்பின்போது இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

ஹெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. தொழிற்சங்கங்களும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை,  பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து பேச்சு நடத்தினர். சந்திப்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்தச் சந்திப்பில் பிரதமர் நடுநிலை வகித்திருந்தார். எமது தரப்பு கருத்தை முன்வைத்தோம். ஜனாதிபதியையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளோம் என என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...