யாழ்.நீதிமன்று தடையுத்தரவு scaled
செய்திகள்இலங்கை

திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ்.நீதிமன்று தடை

Share

தமிழின விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று பிற்பகல் இந்தத் தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது.

நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபலின் நினைவிடத்தில் 34வது ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 26ம் திகதிவரை நடத்த ஏற்படாசெய்யப்பட்டது.

இந்நிலையில் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு யாழ்.தலைமையகப் பொலிஸாரால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் திலீபனை நினைவுகூர மற்றும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நிகழ்வுகளை நடத்த முடியாது எனவும் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தடை விதிக்க வேண்டும் எனவும் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...