யாழ்.நீதிமன்று தடையுத்தரவு scaled
செய்திகள்இலங்கை

திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ்.நீதிமன்று தடை

Share

தமிழின விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று பிற்பகல் இந்தத் தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது.

நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபலின் நினைவிடத்தில் 34வது ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 26ம் திகதிவரை நடத்த ஏற்படாசெய்யப்பட்டது.

இந்நிலையில் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு யாழ்.தலைமையகப் பொலிஸாரால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் திலீபனை நினைவுகூர மற்றும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நிகழ்வுகளை நடத்த முடியாது எனவும் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தடை விதிக்க வேண்டும் எனவும் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....