tamilnih 98 scaled
இலங்கைசெய்திகள்

சன்ன ஜயசுமண ஜனாதிபதியுடன் இணைத்துக்கொள்ள முயற்சி

Share

சன்ன ஜயசுமண ஜனாதிபதியுடன் இணைத்துக்கொள்ள முயற்சி

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

டலஸ் அழகப்பெரும தலைமையில் பொதுஜன பெரமுன அதிருப்தியாளர்கள் குழு, நிதஹஸ் ஜனதா சபாவை உருவாக்கிய போது சன்ன ஜயசுமணவும் அதில் உள்ளடங்கியிருந்தார்.

அதன் பின்னர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் சன்ன ஜயசுமண உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நிதஹஸ் ஜனதா சபாவை விட்டும் விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டது.

எனினும் அங்கு சிறுபான்மைக் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீன் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பு காரணமாக சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் சன்ன ஜயசுமணவை ஒதுக்கி நடக்கத் தலைப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள சன்ன ஜயசுமண தற்போது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலும் அரசாங்கத்திலும் இணைந்து கொள்வதற்கு தூதுவிடத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...