உலகம்செய்திகள்

ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை !

murder 1000 scaled
Share

சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாசலில் கல்லூரி மாணவியொருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் சுவேதா எனும் 25 வயதுப்பெண்ணே கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் .

தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக படித்துவரும் இவர் ரயில் நிலையத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த வேளையில் இளைஞர் ஒருவர் இவரை கத்தியால் குத்திவிட்டு பின்னர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

படுகாயமடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . இளைஞருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காதல் விவகாரமாக இருக்கலாமோ எனும் கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

கடந்த 2016ஆம் ஆண்டு மென்பொருள் துறையில் பணியாற்றிய சுவாதி எனும் இளம்பெண் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சரமாரியாக வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டது.

அதில் குற்றவாளியான ராம்குமார் என்பவர் கைதாகி சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார் .

இந்நிலையில் மீண்டும் இது போன்றதொரு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....