tamilnaadi 99 scaled
இலங்கைசெய்திகள்

சனத் நிஷாந்தவின் மரணத்தில் கொலையென சந்தேகம்

Share

சனத் நிஷாந்தவின் மரணத்தில் கொலையென சந்தேகம்

கட்டுநாயக்க நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அவர் இயற்கையாக நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தாரா அல்லது திட்டமிட்டு கொல்லப்பட்டாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த சனத் நிஷாந்த தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் மிகவும் மோசமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதனால்தான் இந்த சந்தேகம் அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனத் நிஷாந்தவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்கு சென்ற போது ஊடகங்களின் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் மரணத்தை தென்னிலங்கை மக்கள் வரவேற்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சில இடங்களில் பால் சோறு வழங்கி கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...