tamilnaadi 88 scaled
இலங்கைசெய்திகள்

கடன் மறுசீரமைப்பு குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்

Share

கடன் மறுசீரமைப்பு குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்

அமெரிக்க டொலர் பத்திரங்களை வைத்திருப்பவர்களிடம், பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அவர்களுடன் இரண்டு மாதங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

டொலர் பத்திரக்காரர்களுடன் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இன்னும் இலங்கை தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த டொலர் பத்திரங்களை வைத்திருப்பவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட 13 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைப்பது குறித்து அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனை கூடிய விரைவில் முடிவுறுத்த வேண்டும் என்று தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்து நிறைய ஆர்வம்

எனினும் செயல்முறை காரணமாக அது ஒரு குறிப்பிட்ட காலம் எடுப்பதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

சாம்பியா மற்றும் பிற நாடுகளும் இன்னும் தங்கள் கடன்களை மறுகட்டமைப்பதில் தாமதத்துடன் போராடி வருகின்றன.

பீஜிங்கிற்கும் மற்ற கடன் வழங்குநர்களுக்கும் இடையே கடன் நிவாரணம் குறித்த கருத்து வேறுபாடுகளே இதற்கான காரணமாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
Missing Persons
இலங்கை

காணாமல் போனவர்களுக்கு  நடந்தது என்ன ?

இறுதி போரில் இராணுவத்தில் சரணடைந்த 500 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகல்களும் இல்லை. இவ்வாறு...

Suresh Sally 16 1
இலங்கை

தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் சுரேஷ் சலே.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் சிகிச்சை...

Crime
இலங்கை

கத்தியுடன் காவல் நிலையத்தினுள் புகுந்த நபர் – பரபரப்பு வாக்குமூலம

மாற்றுத்திறனாளியான தனது சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ...

Smartraveller
இலங்கை

இலங்கை பயணிகளுக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாக்கு இடையே பயணம் செய்யும் விமானப் பயணிகளின் சுற்றுலாத் திட்டங்களில் திடீர் மாற்றங்கள்...