tamilni 423 scaled
இலங்கைசெய்திகள்

சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

Share

சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

கடந்த 25 நாட்களில் கட்டுநாயக்க நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (26.01.2024) காலை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சாரதியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் விபத்தில் உயிரிழந்ததன் மூலம் இந்த விடயம் தெரியந்துள்ளது.

கொழும்பில் இருந்து கட்டுநாயக்க வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறமும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

எனினும் போதைக்கு அடிமையானவர்கள் நிலத்தடி மின் கம்பிகளை அறுத்துள்ளமையினால் தற்போது வீதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திருட்டுகளை தடுக்க அதிகாரிகள் முயற்சித்த போதிலும், தற்போது நடந்து வரும் இந்த செயலால் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது.

அதற்கமைய, இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளின் உயிரிழப்புக்குக் காரணம் மிகவும் இருண்ட தன்மையா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...