tamilni Recovered 1 scaled
உலகம்செய்திகள்

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே 23 Km நீளத்தில் கடல் பாலம்.., இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

Share

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே 23 Km நீளத்தில் கடல் பாலம்.., இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் பாலம் அமைக்கும் பணியை இந்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பையில் கடந்த 2016 -ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு 21.8 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட Atal Setu Bridge சமீபத்தில் திறக்கப்பட்டது. கடலில் மட்டும் சுமார் 16.5 கி.மீ தூரம் கட்டப்பட்ட இந்த பாலம் இந்தியாவின் நீண்ட பாலம் என்ற பெருமையை பெற்றது.

அந்தவகையில், இந்தியாவின் சுற்றுலாவையும் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதன்படி மற்றொரு அறிவிப்பையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் பாலம் அமைக்கும் பணியை இந்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இந்தியாவின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னாரை இணைக்கும் வகையில் கடலின் குறுக்கே 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம் நிறைவேறினால், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகத்திற்கும், குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இதனால் போக்குவரத்து செலவை 50 % குறைத்து இலங்கை தீவை இணைக்க உதவும் என்றும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பாலம் அமைப்பதற்கு ஒப்புதல் தெரிவித்தார். தற்போது, பாலம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...