செல்வம் அடைக்கலநாதன்
இலங்கைசெய்திகள்

ஒப்படைக்கப்பட்டோர் கொல்லப்பட்டனரா? – செல்வம் எம்.பி. கேள்வி

Share

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மரணச் சான்றிதழ் மற்றும் இழப்பீடு கொடுக்கிறார் எனில் அவர்களை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறார்?

இவ்வாறு நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபை அமர்வில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி, ஐ.நா. சபை செயலாளரை நியூயோர்க்கில் சந்தித்தபோது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகிறோம் எனக் கூறியுள்ளார்.

ஆனால் சர்வதேச மனிதாபிமான அடிப்படையில் போர்க் காலங்களில் சரணடைந்தவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மரணச் சான்றிதழ் கொடுப்போம் எனக் கூறுகின்றார்.

மரணமடைந்தவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டோருக்கே மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும். அப்படி என்றால் கண்கண்ட சாட்சிகளுடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றே ஜனாதிபதி கூறுகிறார்.

அந்த வகையில் கொலை செய்தவர்களுக்கு நீதித்துறை என்ன தண்டனை வழங்கப்போகிறது?
படுகொலை செய்யப்பட்டு மரணச் சான்றிதழ் கொடுப்போம் எனக் கூறுகின்ற ஜனாதிபதி படுகொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவாரா? எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...