tamilnaadi 39 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட கடன் வழங்கும் நிலையம்

Share

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது ஐந்து சீனப் பிரஜைகளையும் ஒரு இலங்கையரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

மேலும், 8 கணினிகள், 13 மடிக்கணினிகள் மற்றும் 49 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையதளம் மூலம் கடன் வழங்கும் போது, ​​கடனாளியின் கையடக்க தொலைபேசிகளின் தனிப்பட்ட தகவல்களை, OPT எண் மூலம் பெற்று, சமூகத்தில் சில தகவல்களை பரப்பி பணம் வழங்குமாறு மிரட்டியதாக பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகள் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் எனவும், இது தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி புலனாய்வுப் பிரிவினருக்கோ தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...