உலகம்
ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு வடகொரியா அனுமதி
கோவிட் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்திருந்த வடகொரியா தனது நட்பு நாடான ரஷ்யாவுக்கு முதன்முதலில் அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கோவிட் தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனை தடுக்க ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தின.
குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி வடகொரியாவும் தனது நாட்டின் எல்லைகளை கடந்த 2020ஆம் ஆண்டு மூடிய நிலையிலேயே தற்போது ரஷ்யாவிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
தனது அண்டை நாடான சீனாவுக்கு முதலில் அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் ரஷ்யாவுக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.