tamilnaadi 31 scaled
இலங்கைசெய்திகள்

நுண்கடன்களை செலுத்த முடியாத உயிரை மாய்த்துள்ள 200 பெண்கள்

Share

கடந்த மூன்று வருடங்களில் நுண்கடன்களை செலுத்த முடியாத குடும்பங்களைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட பெண்கள் உயிரை மாய்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிதிக் கடன் விவகாரம் மீதான விவாதம் இடம்பெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இந்த சட்டமூலத்தின் முக்கிய நோக்கம் கடன் மற்றும் நுண்கடன் வணிகங்களை ஒழுங்குபடுத்துவது மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதாகும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக மத்திய திறைசேரி, மத்திய வங்கி மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் அதிகாரபூர்வமாக நியமிக்கப்படவுள்ளார்.

அத்துடன், நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநருக்கு தலா நான்கு பிரதிநிதிகளை நியமிக்க அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...