tamilnih 59 scaled
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் நிலவும் சீரற்ற காலநிலை

Share

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நேற்று (09.01.2024) பிற்பகல் வெளிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெய்து வரும் கன மழையினால் மட்டக்களப்பில் 123.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மாநகர சபைக்கு உட்பட்ட சின்ன ஊறணி, இருதயபுரம், கருவப்பங்கேணி, கூழாவடி, மாமாங்கம், கல்லடி, வேலூர், நாவற்குடா உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதையடுத்து ஆலயங்கள் உட்பட பல வீடுகள் வெள்ள நீரில் ழுழ்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கிரான் பாலத்தின் மேல் வெள்ளநீர் ஓடுவதால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் இடையிலான் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் படகுசேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வாகரைக்கும் கல்லரிப்பு பிரதேசத்துக்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதையடுத்து உழவு இயந்திரத்தில் போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெள்ளத்தினால் செங்கலடி பிரதேச செயலப்பிரிவில் 115 குடும்பங்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 33 குடும்பங்களும், களுவாஞ்சிக்குடியில் 7 குடும்பங்களும், பட்டிப்பளை பிரதேச செயலக் பிரிவில் 10 குடும்பங்களும், போரதீவுபற்று பிரதேச பிரிவில் 290 குடும்பங்களும், வாகரையில் 393 குடும்பங்களும், காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் 1,498 குடும்பங்களும் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

காத்தான்குடியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்கள் பதுரியா வித்தியாலயத்திலும், செங்கலடியில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்கள் ஏறாவூர் கோவில் மணிமண்டபத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வவுணதீவு ஆற்றில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடரும் கன மழை காரணமாக மாவட்டத்திலுள்ள பெரிய குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் ஆற்று வெள்ளம் காரணமாக தாழ்நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...