tamilnih 53 scaled
இலங்கைசெய்திகள்

வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

Share

இலங்கையில் பொது இடங்கள், நடைபாதைகள், தனியார் பாதைகளில் மற்றும் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்தும் போது அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனம் நிறுத்தப்பட்ட இடங்களில் வாகனங்களில் இருந்து எரிபொருள் திருடப்படுவதாக தெரியவந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 03 இல் வாகனம் நிறுத்திய பின்னர் காரில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் பேஸ்புக் மூலம் பதிவொன்றை பதிவிட்டு எச்சரித்துள்ளார்.

“நாங்கள் முதலில் நாவல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முழு தொட்டியையும் நிரப்பினோம். பின்னர் 5 ஆம் திகதி சாப்பிடுவதற்காக கடைக்கு சென்றோம்.

நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிரம்பியதால் பாதைக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தினோம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாங்கள் வாகனத்திற்கு திரும்பினோம்,

கடுமையான பெட்ரோல் வாசனை இருப்பதைக் கவனித்தோம். உள்ளே நுழைந்து காரை ஓட்ட ஆரம்பித்த போது எரிபொருள் மீட்டர் கிட்டத்தட்ட வெறுமையாக இருந்தது.

நாங்கள் காரின் வெளியே சோதனை செய்தோம், ஒரு கத்தி மற்றும் பெட்ரோல் வடித்த தடங்கள் காணப்பட்டது.

நாங்கள் காரை வேறொரு எரிபொருள் நிலையத்திற்கு கொண்டு சென்றோம், அங்கு சரிபார்த்ததில், எரிபொருள் குழாய் அடியில் இருந்து பெட்ரோல் வெளியேற்றப்பட்டதை கவனித்தோம்.

இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிப்படையாகவே நடந்துள்ளதென வாகனத்தை சரிப்பாத்தவர் தெரிவித்துள்ளார்.

எனவே வாகனத்தை நிறுத்தும் போது கவனமாக இருங்கள். வாகனம் பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம், ஆனால் அவ்வாறான பாதுகாப்புகள் இல்லை” என பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...