tamilnaadi 5 scaled
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வழக்கு

Share

பதில் பொலிஸ் அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக வழக்குத் தொடருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சட்டத்தரணிகளின் சங்கம் சட்டமா அதிபரிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

முன்னாள் இராணுவ சிப்பாயின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்ற அடிப்படையில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட மூவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.

எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுக்கவில்லை. இந்த நிலையிலேயே சட்டமா அதிபரிடம் புதிய கோரிக்கையை சட்டத்தரணிகளின் சங்கம் முன்வைத்துள்ளது.

இந்நிலையில் குறித்த மூவர் மீதும் வழக்கை தாக்கல் செய்யவேண்டியது சட்டமா அதிபரின் கடமை என்று சட்டத்தரணிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...