tamilni 76 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கு கிழக்கு தொடருந்து கடவை காவலர்கள் பணிப்புறக்கணிப்பு

Share

வாழ்வாதற்கான சம்பளம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் உள்ள தொடருந்து கடவை காவலர்கள் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு ஜனவரி 4 ஆம் திகதியான இன்று காலை 6 மணி முதல் 6ஆம் திகதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ள தொடருந்து கடவை காவலர்கள் சங்கத்தின் தலைவர், அந்த நேரத்தில் பயணிகளை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

சரியான ஊதியம் இன்றி, கடந்த 11 வருடங்களாக நாடளாவிய ரீதியில் 2,064 தொழிலாளர்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தொடருந்து கடவை காவலர்களாக கடமையாற்றி வருவதாக, முல்லைத்தீவு ஊடக மையத்தில் கடந்த நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் ரொஹான் ராஜ்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் கொடுப்பனவே கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸாரின் கீழ் கொத்தடிமைகளாக கடமையாற்றும் தொடருந்து கடவைக் காவலர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வடக்கிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதிக்கு அறிவிக்கவே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த ரொஹான் ராஜ்குமார், வாழ்வதற்கான சரியான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

“பொலிஸாரின் அடிமைகளாக இருக்கும் எம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்வரும் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் வடபகுதிக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கின்றோம்.

” தொடருந்து திணைக்களத்தின் கீழ் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வரும் தொடருந்து கடவை காவலர்களின் ஒன்றியம், சரியான சம்பளம் வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழில்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்துகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...