tamilni 76 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கு கிழக்கு தொடருந்து கடவை காவலர்கள் பணிப்புறக்கணிப்பு

Share

வாழ்வாதற்கான சம்பளம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் உள்ள தொடருந்து கடவை காவலர்கள் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு ஜனவரி 4 ஆம் திகதியான இன்று காலை 6 மணி முதல் 6ஆம் திகதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ள தொடருந்து கடவை காவலர்கள் சங்கத்தின் தலைவர், அந்த நேரத்தில் பயணிகளை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

சரியான ஊதியம் இன்றி, கடந்த 11 வருடங்களாக நாடளாவிய ரீதியில் 2,064 தொழிலாளர்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தொடருந்து கடவை காவலர்களாக கடமையாற்றி வருவதாக, முல்லைத்தீவு ஊடக மையத்தில் கடந்த நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் ரொஹான் ராஜ்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் கொடுப்பனவே கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸாரின் கீழ் கொத்தடிமைகளாக கடமையாற்றும் தொடருந்து கடவைக் காவலர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வடக்கிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதிக்கு அறிவிக்கவே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த ரொஹான் ராஜ்குமார், வாழ்வதற்கான சரியான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

“பொலிஸாரின் அடிமைகளாக இருக்கும் எம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்வரும் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் வடபகுதிக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கின்றோம்.

” தொடருந்து திணைக்களத்தின் கீழ் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வரும் தொடருந்து கடவை காவலர்களின் ஒன்றியம், சரியான சம்பளம் வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழில்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்துகிறது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...