tamilnih 20 scaled
செய்திகள்விளையாட்டு

வரலாற்றிலேயே மோசமான சாதனையை படைத்த இந்திய அணி

Share

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது.

இந்திய அணி 153 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில், அதன் பின்னர் ஒரு ஓட்டங்களையேனும் பெறாமல் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இதன் மூலம், வரலாற்றில் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் தொடர்ச்சியாக ஆறு விக்கெட்டுக்களை இழந்த ஒரே அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

இந்திய அணி 153/4 என்ற நிலையில் இருந்த போது லுங்கி இங்கிடி வீசிய ஓவரில் கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர்.

தொடர்ந்து, காகிசோ ரபாடா வீசிய ஓவரில், விராட் கோஹ்லி, பிரசித் கிருஷ்ணா மற்றும் முஹம்மத் சிராஜ் ஆகியோர் ஆட்டமிழக்க இந்திய அணி 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

குறித்த ஆறு விக்கெட்டுக்களும் லுங்கி இங்கிடி மற்றும் காகிசோ ரபாடா வீசிய 11 பந்துகளில் சரிந்துள்ளன.

தென்னாபிரிக்காவின் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அத்துடன், முதலாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 55 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...