tamilni 46 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி ஏற்றதும் வாக்குறுதிகளை மறந்து விடும் இலங்கை ஜனாதிபதிகள்

Share

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அளிக்கும் ஜனாதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் அதனை மறந்து விடுவதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஶ்ரீ சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார்.

தான் மாநாயக்க தேரராக பதவி ஏற்றுக்கொண்ட கடந்த இருபது ஆண்டுகளாகவே இந்த நிலைமை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக தம்மிடம் வாக்குறுதி அளித்த ஜனாதிபதிகள் எவரும் பதவி ஏற்றதன் பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் இந்த விடயம் பற்றி பேசப்பட்டு தேர்தலின் பின்னர் வழமை போன்று அந்த விடயம் இருட்டடிப்புச் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றைய தினம் மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...