tamilnih 13 scaled
உலகம்செய்திகள்

பாபா வாங்காவின் அடுத்த 12 மாதங்களுக்கான கணிப்புக்கள்

Share

பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்காவின் நிஜப் பெயர் Vangelia Pandeva Gushterova என்பதாகும்.

இளவரசி டயானாவின் மரணம், Kursk என்னும் ரஷ்ய நீர்மூழ்கி மூழ்கி விபத்து, 9/11 தீவிரவாத தாக்குதல்கள், கோவிட் என பல விடயங்களை துல்லியமாக கணித்தவராக பாபா வாங்கா விளங்குகின்றார்.

மலர்ந்திருக்கும் 2024 ஆம் ஆண்டிலும், உலகத்தலைவர்கள் சிலர் கொல்லப்படுவது, உயிரி ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் என சில கணிப்புக்களை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அவர் கணித்த கணிப்புக்களாவன,

2024ஆம் ஆண்டில், ஐரோப்பாவில் தீவிரத்தாக்குதல்கள் நடக்கும் என கணித்துள்ள பாபா, உலகின் பெரிய நாடு ஒன்றில் உயிரி ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் என கணித்துள்ளார்.

இவ்வாண்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் அதிகரிக்கும் கடன் மற்றும் புவிசார் பதற்றங்களால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் குழப்பம் உருவாகும் என்றும் கணித்துள்ளார்.

அத்துடன் ஆண்டு முழுவதும் மோசமடையும் பருவநிலை, பயங்கர இயற்கை பேரழிவுகள், சைபர் தாக்குதல்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் மீது தாக்குதல்கள் முதலான விடயங்களும் பாபாவின் 2024ஆம் ஆண்டுக்கான கணிப்புகளில் அடங்குகின்றது.

இக்கணிப்புகளுக்கு முன்னரே ரஷ்ய ஜனாதிபதி புடின் அவரது நாட்டவர் ஒருவராலேயே கொல்லப்படுவார் என்பதைக் குறித்து பல முறை செய்திகள் வெளியாகிவிட்டன.

உக்ரைன் போர் தொடரும் நிலையில் புடினின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால், உலகில் பல குழப்பங்கள் உருவாகக்கூடும்.

இதேவேளை பாபா 2024 ஆம் ஆண்டு குறித்து கணித்துள்ள நன்மையான விடயங்களாக அல்ஸீமர், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு 2024இல் புதிய சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்படும் என்றும், குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்படும் என கூறியுள்ளார்.

மேலும், 2028இல் உலகத்தில் பசி என்பது முடிவுக்கு வந்துவிடும் என்றும், 2076இல் கம்யூனிஸம் மீண்டும் திரும்பும் என்றும் 2304இல் மனிதர்கள் டைம் ட்ராவல் என்னும் விடயத்தை கண்டறிந்துவிடுவார்கள் என்றும் கணித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...